Tuesday, April 26, 2011


தேடி சோறு நிதம் தின்று – பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்

வாடி துன்பம் மிக உழன்று –பிறர்

வாட பலசெயல்கள் செய்து –நரை

கூடி கிழபருவமெய்தி –கொடுங்

கூற்றுக் கிரையென்ன பின்மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போல் -நான்

வீழ்வெ னென்று நினைத்தாயோ….

No comments:

Post a Comment